tamilnadu

img

எரியும் நெருப்பை அணைக்காத அதிமுக

முன்னாள் எம்பி அன்வர் ராஜா அதிருப்தி

ராமநாதபுரம், டிச. 30- குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதர வாக அதிமுக அரசு செயல்படுவ தால் தமிழகத்தில் உள்ள சிறு பான்மை மக்களின் வாக்குகளை இழந்து வருகிறது என முன்னாள்  எம்.பி. அன்வர்ராஜா கூறியுள்ளார்.  அதிமுக சிறுபான்மை பிரிவுச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர்ராஜா கூறியிருப்பதாவது:- குடியுரிமை திருத்தச் சட்டம்  நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் நிறைவேற்றப்பட்டுள் ளது. மாநிலங்களவையில் ஓட்டெ டுப்புக்கு வந்தபோது இந்த மசோ தாவை ஆதரித்து அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்ததால் குடி யுரிமை சட்டத் திருத்த மசோதா  125 வாக்குகளை பெற்று நிறை வேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து 105 பேர் வாக்களித்தனர்.

அமைதிகாப்பது ஏன்?

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குடி யுரிமை திருத்தத் சட்டம் குறித்து  விவாதிக்க முடியாது என்று தெரி வித்துள்ளனர். இந்த விவ காரத்தில் அதிமுக காத்து வரும்  அமைதி, பாஜகவின் கருத்துக் களை ஆமோதிக்கும் வகையில் இருப்பதாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் நினைக்கிறார்கள்.

செல்வாக்கு சரிவு

முத்தலாக் சட்ட முன் வடிவு  நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது நான் எதிர்த்து குரல்  கொடுத்தேன். தற்போது குடி யுரிமை  திருத்தச் சட்டத்திற்கு எதி ராக சிறுபான்மை மக்கள் போராட்டங்களை நடத்தி வருகி றார்கள். மத்தியில் ஆளும் பாஜக  அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுவதால் தமிழ கத்தில் உள்ள சிறுபான்மை மக்க ளின் வாக்குகளை அதிமுக இழந்து வருகிறது. இது அதிமுக வுக்கு பெரிய இழப்பாகும். எனவே தான் மத்திய அரசின் குடியுரிமை  திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அதி முக சிறுபான்மைப் பிரிவு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களின் அச்சம்

பல்வேறு மாநிலங்கள் இந்த  சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டன. அசாம் மாநிலத்தில் மட்டுமே  தேசிய மக்கள் குடியுரிமை  பதிவேடு நடைமுறைப்படுத்தப் படும் என்று முதலில் அறிவிக்கப் பட்டது. ஆனால் தற்போது நாடு  முழுவதும் இந்த சட்டம் அமல்ப டுத்தப்படும் என்ற அச்சம் இஸ்லா மிய மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப் பட்டால் நாட்டின் இறையாண்மை மற்றும் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு வந்துவிடும். எனவே மத்திய அரசின் இந்த சட்டத்தை  அதிமுக எதிர்த்தால் மட்டுமே தற்போது நடந்து வரும் போராட்ட  எதிர்ப்பு என்ற நெருப்பை அணைக்கும் தண்ணீர் போல மக்களின் மனதில் அதிமுக நீங்கா  இடம்பெறும். இதற்காக அதிமுக தலைமை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான் சிறுபான்மை மக்க ளின் உணர்வாக உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.


 

 

 

;