tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலில் திமுக, தோழமைக் கட்சிகளோடு உடன்பாடு

சிபிஎம் மாநிலக்குழு முடிவு

சென்னை,நவ.19- உள்ளாட்சித் தேர்தலில் திமுக, தோழமைக் கட்சிகளோடு உடன்பாடு செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலக்குழு முடிவுசெய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் செவ்வா யன்று சென்னையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு,  மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு போட்டியிடுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. மத்தியில் அமைந்துள்ள மோடி தலைமை யிலான பாஜக கூட்டணி அரசு அனைத்து வகையிலும் மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது. கார்ப்பரேட் கொள்ளைக்கு ஆதரவாகவும், ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதிலும் முனைப்பாக இருக்கிறது. இதனால் நாட்டில் இதுவரை சந்தித்திராத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இவைகளுக்கு தீர்வு காண்பதற்கு மாறாக, மக்களை திசை திருப்பும் வகையில் மதவெறி நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு, மத்திய  பாஜக அரசுக்கு அனைத்து வகையிலும் பணிந்து சென்று தமிழகத்தின் நலனை காவு  கொடுத்து வருகிறது. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் பல்வேறு மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோத திட்டங்கள் தமிழகத்தில் செயல்படு த்தப்படுகின்றன. ஊழல் இல்லாத துறையே இல்லை என்றாகி விட்டது.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகளோடு இணை ந்தும், சுயேச்சையாகவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத்தில் ஊழலின் மொத்த உருவமான அதிமுக அரசையும், அதோடு கூட்டணி சேர்ந்துள்ள பாஜக அணியையும் வீழ்த்துகிற அரசியல் கடமையை நிறைவேற்றும் வகை யில், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளோடு தொகுதி உடன்பாடு கண்டு தேர்தலை எதிர் கொள்வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை எதிர்த்து தமிழகத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு மகத்தான வெற்றி அளித்தது போல், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்து மகத்தான வெற்றியை அளித்திட வேண்டு மென தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வேண்டுகிறது.