tamilnadu

img

உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைத்த அதிமுக அரசு...

குடியரசுதினம், மே தினம், சுதந்திர தினம்,காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்கள் மட்டுமேகிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.  இந்தகூட்டங்களில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படும். அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயனாளிகள் குறித்து கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும், ஊராட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல், கிராம திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல் போன்ற பணிகளும் நடைபெறும். இப்படி ஊராட்சிகளின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுடன் கூடிய கிராமசபைக் கூட்டத்திற்கு  அதிமுக அரசு தடைவிதித்தது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கிராமசபைக் கூட்டங்கள் ரத்துசெய்யப்படுவதாகத் தமிழக அரசு  வியாழக்கிழமை இரவு திடீரென அறிவித்தது. கொரோனா காரணமாக முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால் தனிமனித இடைவெளியுடன் கூட்டத்தை நடத்தமுடியும். மாவட்டந்தோறும் வளர்ச்சித்திட்டங்களை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இதற்காக அவர்மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் கொரோனா தீவிரமாக இருந்த காலகட்டத்தில் தான்.

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் வகையில் 3 சட்டங்களைநிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் அமலுக்குவந்தால் விவசாயிகளின் விளை பொருட்களைஅரசு கொள்முதல் செய்யாது, அடிமாட்டு விலைக்கு அவர்கள் கார்ப்பரேட்வியாபாரிகளிடம் விற்கவேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால் தான் அந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும்விவசாயிகளும் விவசாயிகள் சங்கங்களும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கிராமசபைகள் என்பது கிராம மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் இடமாகும். மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகத்தீர்மானங்களும் நிறைவேற்ற முடியும். எனவேதான் தமிழகத்தில் பாஜகவின்  சேவகர்களாகஇருக்கும் ஆட்சியாளர்கள் கிராமசபைக் கூட்டங்களை திடீரென ரத்து செய்துவிட்டார்கள். பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் தமிழகத்தில்பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.இதில் அதிமுக, பாஜக சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காலங்களில் ஜவகர் வீடுகட்டும் திட்டம்,நூறுநாள் வேலைத் திட்டம், சாலை அமைப்பதுஉள்ளிட்டபணிகளில் கோடிக்கணக்கில்ஊழல்கள் நடைபெற்றுள்ளன.

இதற்கு எதிராகவும்  கிராமசபைக் கூட்டங்களில் கேள்விகள் கேட்கப்படும் என்பதை அறிந்து கிராமசபைக் கூட்டங்களை அதிமுக அரசு ரத்து செய்துள்ளது. இது ஊராட்சி மன்றங்களின் ஜனநாயகப் பூர்வமான செயல்பாடுகளை முடக்கும் செயலாகும். கிராம ராஜ்யத்தை வலியுறுத்திய தேசத்தந்தை காந்தி பிறந்தநாளில் இத்தகைய நடவடிக்கையை  அதிமுக அரசு மேற்கொண்டதற்கு  மத்திய பாஜக அரசின் அழுத்தமே காரணம்.