tamilnadu

img

மக்களிடம் கற்று செயலாற்ற வழிகாட்டும் மூத்த தோழர்

விருதுநகர் மாவட்டத்தில் களப்பணியாற்றி வந்துள்ள சில மூத்த தோழர்களை இத்தொடரில் சந்தித்திருக்கிறோம். இப்போது நாம் சந்திக்கவிருப்பது அவர்களில் ஒருவரான தோழர் ஜே.லாசர்.

இவர் 1942ம் ஆண்டு குமரிமாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலஞ்சி பகுதியில் பிறந்தவர்.  பிறந்த ஒரு மாதத்திற்குள் இவரது பெற்றோர்கள் சாத்தூருக்கு குடும்பத்துடன் குடியேறி னர். அங்கு இவர் 8ம்வகுப்பு (பழைய இ.எஸ்.எல்.சி) வரை படித்தார்.  போதிய வருவாய் இல்லாததால் அதற்கு மேல் அவரை பெற்றோர்களால் படிக்கவைக்க முடியவில்லை.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகாசி நகரக் குழு உறுப்பினராகச் செயல்பட்டு வருகிற தோழர் லாசர். சிறு வயதிலேயே சாத்தூரில் ஒரு அச்சகத்தில் அச்சுக் கோர்ப்புத் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். படிப்படியாக அச்சகத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பி னராகி, சங்க வேலைகளில் ஈடுபட்டார். அச்சக வேலையும் சங்கப் பணியும் இல்லாதநேரங்களில் அப்பகுதியில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் மன்றத் திற்குச் சென்று வருவார். “அங்கே பத்திரி கைகள் படிக்கவும் விவாதிக்கவும் கிடைத்த வாய்ப்பு எனக்கு வெளி உல கத்தைப் பற்றிய புரிதல் உருவாகக் கார ணமாக அமைந்தது. சிவகாசியிலிருந்து  சாத் தூருக்கு வந்த போது, தோழர்  தொண்டர் துரைசாமி, என் போன்றவர்க ளுக்கு சங்கப் பணிகள் தொடர்பாக  வழிகாட்டினார்,” என அந்த நாட்களை நினைவு கூர்கிறார் தோழர் லாசர்.

ஒரு கட்டத்தில் சங்கத்தினுடைய தலைவராக கருப்புசாமி, செயலாள ராக லாசர் இருவரும் தேர்வு செய்யப் பட்டார்கள். ஏற்கெனவே கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த கருப்புசாமிதான் லாசரை 1961ல் கட்சிக்குள் கொண்டு வந்தார்.  1962ம் ஆண்டு நாடு முழு வதும் கட்சியின் மீது  ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு தலைவர்களும், தோழர்களும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது லாசரும் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் இருந்தார். இது அவருடைய முதல் சிறை அனுபவம். 1964ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது சாத்தூரில் ஒரு வரைத் தவிரமற்ற தோழர்கள் அனை வரும் தன்னோடு வந்து இணைந்தனர் என்று தெரிவிக்கிறார் லாசர். இந்தப் பின்னணியில் தோழர் லாசர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாள ராகத் தேர்வு செய்யப்பட்டார்.  போர்க்குணமிக்க இவருடைய தொடர்ச்சியான இயக்கப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளை உள்ளடக்கிய சாத்தூர் தாலுக்கா குழுவின் செயலாளராக 1968ல் தேர்வு செய்யப்பட்டார். தொலைபேசி, வாகன வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாத முழுநேர ஊழியர் அலவன்ஸ் போன்ற எந்த ஏற்பாடுகளும் இல்லாத அன்றைய சூழலில் சுமார் 100 மைல் சுற்றளவு கொண்ட அந்தப் பகுதிகளுக்குச் சைக்கிளிலேயே சென்று இயக்கம் இட்ட பணிகளை நிறைவேற்றி வந்தார். 

சாத்தூர் நகரத்தில் பேனா நிப் தயா ரிப்பும் முனைப்பாக இருந்த காலகட்டம் அது. சுவையான சிற்றுண்டியாகிய சாத்தூர் சேவு இன்றளவும் புகழோடு இருக்கிறது. அந்த நிப்புக் கம்பெனிகளின் தொழிலாளர்கள் சங்கம், சேவுக்கடைத் தொழிலாளர்கள் சங்கம், அச்சுத் தொழி லாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களை உருவாக்குவதில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.  1970ல் சிவகாசியில் மக்கள் தொண்டராக அறியப்பட்ட தொண்டர்  துரைச்சாமி அவர்கள் உடல் நலக்குறை வினால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே  அவருக்கு உதவியாகக் கட்சிப் பணி யாற்றிட அப்போதைய மாவட்டச்  செயலாளர் தோழர் எஸ்.ஏ. பெருமாள், லாசரை சிவ காசிக்கு அனுப்பினார். பர்மா விலிருந்து தாயகம் திரும்பிய  தமிழர்கள் சிவகாசியில் அவர்களுக்காக கட்டப்பட்ட  47 வீடுகளில் குடியமர்த் தப்பட்டனர். அப்பகுதியில் இருந்த ரவுடிகளின் தொல்  லையால் அந்த குடும்பங் கள் நிம்மதியாக வாழமுடி யாத நிலை இருந்தது. இதை யறிந்த தோழர் ஜே.லாசர் அப்பகுதி யிலேயே வாடகைக்கு வீடு பிடித்து குடி யேறினார். துணிச்சலுடன் நேரடியாகப் போராடி ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். தோழரின் முயற்சிக்கு அங்கி ருந்த காவல்துறையினரும்  உதவியாக இருந்தனர். இதனால் இப்பகுதி மக்களுக்கு லாசர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. தொழிலாளர்களின்,  ஏழை, எளிய  மக்களின் நலன்களை காக்கும் போராளி யாக திகழ்ந்த தோழர் ஜே.லாசர் இரண்டு  முறை சிவகாசி நகர்மன்ற உறுப்பினராக இப்பகுதியிலிருந்து தேர்வு செய்யப் பட்டார். இவரது இயக்கப் பணிகளால் கட்சியும் தொழிற்சங்க அமைப்புகளும் வலுவாகக் காலூன்றின. சங்கிலித் தொடராகக் கட்சிக் கிளைகள் அமைக் கப்பட்டு உயிரோட்டமாக செயல்படத் துவங்கின.

எந்தச் சட்டச் சலுகையும் இல்லாமல் கொத்தடிமைகள் போல  இருந்த சிவகாசி  அச்சுத் தொழிலாளர்களுக்காக சிஐடியு  சங்கம் பி.எப்., இ.எஸ்.ஐ., ஓவர் டைம்  வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம், அதிக  நேர வேலையின் போது உணவு, டீ அலவன்ஸ், ஐந்து ஆண்டுகள் சர்வீஸ் முடித்தவர்களுக்கு கிராஜூவிட்டி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து  போராட்டத்தை அறிவித்தது. ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை பங்கேற்கச் செய்து அந்தப் போராட் டத்தை பிரமாண்டமாக நடத்தினார் லாசர். மூன்று நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் இவர் தலைமையில் நடந்தது. தொழிற்சங்கத்திற்கும், அச்சக  உரிமையாளர் சங்கத்திற்கும் இடையே,  தொழிலாளர் நல அலுவலர் முன் 12(3)  விதியின் கீழ் ஒப்பந்தம் கையெழுத்தா னது. அந்த ஒப்பந்தத்தால் தொழிலா ளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட சட்டப்பூர்வ உரிமைகள் இப்போதும் அங்கே நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரசின் கெடுபிடிகளையும், காவல் துறையின் அடக்கு முறைகளையும், எதிரிகளின் மிரட்டல்களையும் லாசர் மக்களைத் திரட்டி துணிச்சலோடு எதிர்கொண்டார். இவர் உள்ளிட்டு நமது இயக்கத் தோழர்கள் பலமுறை கைது செய்யப்பட்டு பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளால் லாசர் பின் வாங்கிவிடவில்லை. உதாரண மாக 1974ம் ஆண்டு ஸ்டாண்டர்டு லித்தோ  பிரஸ் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது ஏற்படுத்தப்பட்ட மோதலைச் சாக்கிட்டு லாசர் உள்ளிட்ட 90 தொழி லாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் 40 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடைபெற்ற வழக்கின் முடிவில், அரசுத் தரப்பு வாதம் தள்ளுபடி செய்யப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

எந்தச் சட்டச் சலுகையும் இல்லாமல் கொத்தடிமைகள் போல  இருந்த சிவகாசி  அச்சுத் தொழிலாளர்களுக்காக சிஐடியு  சங்கம் பி.எப்., இ.எஸ்.ஐ., ஓவர் டைம்  வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம், அதிக  நேர வேலையின் போது உணவு, டீ அலவன்ஸ், ஐந்து ஆண்டுகள் சர்வீஸ் முடித்தவர்களுக்கு கிராஜூவிட்டி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து  போராட்டத்தை அறிவித்தது. ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை பங்கேற்கச் செய்து அந்தப் போராட் டத்தை பிரமாண்டமாக நடத்தினார் லாசர். மூன்று நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் இவர் தலைமையில் நடந்தது. தொழிற்சங்கத்திற்கும், அச்சக  உரிமையாளர் சங்கத்திற்கும் இடையே,  தொழிலாளர் நல அலுவலர் முன் 12(3)  விதியின் கீழ் ஒப்பந்தம் கையெழுத்தா னது. அந்த ஒப்பந்தத்தால் தொழிலா ளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட சட்டப்பூர்வ உரிமைகள் இப்போதும் அங்கே நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரசின் கெடுபிடிகளையும், காவல் துறையின் அடக்கு முறைகளையும், எதிரிகளின் மிரட்டல்களையும் லாசர் மக்களைத் திரட்டி துணிச்சலோடு எதிர்கொண்டார். இவர் உள்ளிட்டு நமது இயக்கத் தோழர்கள் பலமுறை கைது செய்யப்பட்டு பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளால் லாசர் பின் வாங்கிவிடவில்லை. உதாரண மாக 1974ம் ஆண்டு ஸ்டாண்டர்டு லித்தோ  பிரஸ் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது ஏற்படுத்தப்பட்ட மோதலைச் சாக்கிட்டு லாசர் உள்ளிட்ட 90 தொழி லாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் 40 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடைபெற்ற வழக்கின் முடிவில், அரசுத் தரப்பு வாதம் தள்ளுபடி செய்யப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் 6 வயதுக் குழந்தைகளும் அதிகாலை 3 மணியிலிருந்து மாலை 6 மணி வரையில்  வேலை செய்யும் அவலம் இருந்தது.  1978ம் ஆண்டு இவ்வாறு எஸ்.புதுப்பட்டி யில் இருந்த தீப்பெட்டி தொழிற்சாலை களுக்கு வேலைக்கு சென்ற 45 குழந்தை கள் தொடர் மழையினால் அர்ச்சுனா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி, மணலில் புதைந்து விட்டனர். அப்போது மீட்புக் குழுவினரோடு துணிச்சலாக ஆற்றுக்குள் இறங்கித் தேடித் தேடி மண்ணுக்குள் புதைந்த குழந்தைகளின் உடல்களைத் தோண்டியெடுத்து தோளில் சுமந்து வந்தவர் தோழர் ஜே.லாசர். நிலைமையை நேரில் காண அன்றைய  முதல்வர் எம்ஜிஆர் வர வேண்டும் என கட்சியின் மாவட்டத் தலைமை முயன்றது. தோழர் கே.பி.ஜானகி யம்மாள் முதலமைச்சரோடு எஸ்.புதுப்பட்டிக்கு வந்தார். அந்தக் கொடூர பாதிப்புக்கு பிறகு தான் சட்டம் இயற்றப் பட்டு குழந்தை தொழிலாளர் உழைப்பு ஓரளவிற்கு தடுக்கப்பட்டது.

நாரணாபுரம் கிராமத்தில் உள்ளரத்தினம் ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு இறந்த 9 தொழிலாளர்கள் குடும்பங்க ளுக்கும், அருணா பயர் ஒர்க்சில் ஏற்பட்ட விபத்தில் இறந்த 30 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் நட்ட ஈடு வாங்கித் தருவதில் தோழர் லாசரின் பங்கு முக்கிய மானது. இதன் மூலம் கிடைத்த தொடர்பு களைப் பயன்படுத்தி லாசர் முயற்சியினால் பெத்திலிப்பட்டி, ஆண்டியாபுரம், அனுப்பன்குளம் போன்ற கிராமங்களில் கட்சிக் கிளைகள் உருவாக்கப்பட்டு இன்று வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.  பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு கட்டம் வரையில் சல்லிக்காசு கூட நட்ட ஈடு கிடைக்காது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிஐடியு சங்கமும் நடத்திய நீண்ட போராட்டத்தின் பலனாக, விபத்தில் இறந்தால் குறைந்தபட்சம் தலா ரூ.5.5 லட்சம்  நட்டஈடு தற்போது கிடைத்து வருகிறது. அந்தப் போராட்டத்தில் லாசர் முன்னணி  பாத்திரம் வகித்தார். எந்தப் பட்டாசு ஆலை யில் எப்போது விபத்து ஏற்பட்டாலும் முதல் ஆளாக அங்கே சென்று தொழிலாளர்களைக் காப்பாற்றும் முயற்சிகளை எடுத்தவர் லாசர்.

சிவகாசியில் திருமணம் கூட செய்து கொள்ளாமல் அர்ப்பணிப்போடு செயல்பட்டு  வந்த தொழிற்சங்க ஸ்தாபகத் தலைவர் தொண்டர் துரைச்சாமி அவர்களது நினை வாக நகரத்தின் மையப் பகுதியில் “தொண்டர்  துரைச்சாமி நினைவகம்” என்ற கட்டிடத்தை உருவாக்கியதில் லாசருக்கு முக்கியப் பங்குண்டு.  மதுரை மாநகரில் “தீக்கதிர்” தினசரி இத ழாக வெளியாக தொடங்கியபோது அதனு டைய முதல் பிரதியை அச்சுக் கோர்த்து கொடுத்த தொழிலாளியாக தான் வேலை செய்ததை பெருமையாக கூறுகிறார் லாசர். 1976 நெருக்கடி நிலை காலத்தில் தீக்கதிருக்கு சென்சார் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்த போது “செய்திக்கதிர்” என்ற இதழ் தோழர் லாசரின் சொந்த அச்சகத்தில் அவரால் அச்சுக் கோர்த்து, அச்சிடப்பட்டு தோழர் எஸ்.ஏ.பெருமாள் வழிகாட்டுதலில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் மூலம் தமிழகத்தின் பெரும் பகுதி நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகவும், இராமநாதபுரம் மாவட்டம் பிரிந்த பின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், பின்னர் இராமநாத புரம் மாவட்டம், விருதுநகர், சிவகங்கை,  இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்க ளாகப் பிரிந்த போது விருதுநகர் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினராக 2013 வரை தொடர்ந்து செயல்பட்டுள்ளார். ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் தொழிற் சாலையில் சங்கம் உருவான போதும்,  தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாநில அமைப்பு சேலத்தில் உருவான போதும் லாசர் ஸ்தாபக நிர்வாகிகளில் ஒரு வராக இருந்துள்ளார். விருதுநகர் மாவட்ட  சுமைப்பணித் தொழிலாளர் சங்க தலைவராக வும், அதன் நிர்வாகியாகவும் இன்றுவரை செயல்பட்டு வருகிறார். இப்போதும் சிஐ டியு மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டு வரு கிறார்.

தற்போது 78 வயதாகும் தோழர் லாசர்  உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டி ருந்தாலும் இப்போதும் அயராது கட்சிப்பணி ஆற்றி வருகிறார்.  இவர் மட்டுமல்ல,  இவ ரது குடும்பமே கட்சிக் குடும்பம். மூத்த மகன்  ஜோசப் ஸ்டாலின், பராசக்தி காலனி கிளைச்  செயலாளராக செயல்படுகிறார். இரண்டா வது மகன் பகத்சிங் பாபு அரசுப் போக்கு வரத்து அரங்க கட்சிக் கிளையிலும், சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்திலும் செயல்பட்டு வருகிறார். இவரது மருமகள் கட்சி உறுப்பின ராக இருப்பதோடு, சிவகாசி நகர கூட்டுறவு வங்கி இயக்குநர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி காலம் சென்ற தோழர் ராஜபுஷ்பம் கடைசி மூச்சு வரையில் கட்சி உறுப்பினராகப் பணி யாற்றினார்.  தோழர் லாசர், பல நூல்களைத் தொடர்ந்து படிப்பவர். அமைப்புக்கு மார்க்சிஸ்ட் வாசகர் வட்டம், செம்மலர் வாசிப்பு வட்டம் போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று, ஒரு இயக்கவாதி வாசிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை  உணர்த்துபவராக இருக்கிறார். இவரின் மற்றொரு பண்பு சிவகாசியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் நட்போடு இருப்பது. 

தோழர் லாசரைப் பற்றிய கட்டுரை எழுது கிற போதுதான் சமீபத்தில் கூடிய கட்சியின் மத்தியக் குழு தீர்மானம் மின்னஞ்சல் மூலம் கிடைத்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட  பெரும் தோல்வியை பரிசீலித்த கட்சியின் மத்தியக் குழு கட்சி அணிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. “மக்களிடம் செல்வோம், அவர்களிட மிருந்து கற்றுக் கொள்வோம். அவர்களோடு உயிரோட்டமான தொடர்பை உருவாக்கி அவர்களுடைய நலன்களைப் பாதுகாக்க தீர மாக போராடுவோம்”. கட்சியின் மேற்கண்ட  அறைகூவலை அமலாக்கிட இன்றைய இளைய தலைமுறையினருக்கு தோழர் லாச ரின் வாழ்வும், பணியும் முன்னுதாரணமாக திகழும். கைது, சிறை, வழக்கு அனைத்தை யும் எதிர்கொண்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்போடு தோழர் லாசர் ஆற்றிவரும் தொழிற்சங்கப்பணி, கட்சிப் பணிபாராட்டுக்குரியது - பின்பற்றத்தக்கது.