tamilnadu

img

48 சவரன் நகைகள் கொள்ளை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை,நவ.23- ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் நாற்பத்தி எட்டரை (48.5) சவரன் நகைகளை காவல்துறையினரின் வாரிசுகள் கொள்ளையடித்ததாக அளிக்கப்பட்ட புகார் மீதான விசாரணையை சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் மாற்றியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், சிறுகடம்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி நடராஜன் வீட்டில், 2014 ஆம் ஆண்டு நகைகள் உள்ளிட்டவை கொள்ளை யடிக்கப்பட்டன. இதுதொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், தடயவியல் சோதனை அறிக்கை திருப்திகர மாக இல்லை எனவும் தெரிவித்து, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.