சென்னை,நவ.25- உள்ளாட்சித் தேர்தல் தேதியை டிசம்பர் 2 ஆம் தேதி தெரிவிப்பதாக அண்மை யில் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில் கூறியிருந்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடு பட்டுள்ளது. இதனிடையே, மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பேரூராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஆகிய பதவி களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே, கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறங்களுக்கு தனித்தனியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாமா? என்று மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவ தாக சொல்லப்படுகிறது. 2 கட்ட தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோ சனை நடத்தி வருவதாகவும், டிசம்பர் மாத இறுதியில் பஞ்சாயத்துகளுக்கான தேர்த லையும், ஜனவரி மாத தொடக்கத்தில் மாந கராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான தேர்த லையும் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.