tamilnadu

img

1 தனிமைதான் கொரோனாவுக்கு ஒரே மருந்து: அமைச்சர்

கொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப் படுத்தி கொள்வதுதான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,, "கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க வருமுன் காப்போம் என்ற திட்டம் மூலம் முதலமைச்சர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்" என்றார்.

பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டதை அடுத்து, அது துறை ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது ரூ.405 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது என்றும் இந்த வைரசுக்கு ஒரே மருந்து சுய தனிமை தான். மக்களின் ஒத்துழைப்பு தான் இந்த நோய்க்கு ஒரே தீர்வு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

;