உளுந்தூர்பேட்டை. மே, 31- அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்க ளுக்கு மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்காமல் பிடித்தம் செய்யும் நடை முறையை கைவிட வேண்டும், ஏப்ரல் மாதத்தைப் போலவே அனைத்து தொழி லாளர்களுக்கும் முழு ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உளுந்தூர்பேட்டை பணிமனையில் தொழிலாளர்கள் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிமனை கிளை மேலாளர் தொழிலா ளர்களை ஒன்று கூடக்கூடாது, உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் என தொழிற் சங்க பிரதிநிதிகளிடம் தொடர்ந்து வலி யுறுத்திய நிலையில் அங்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் தொழிலா ளர்கள் கிளை மேலாளரிடம் மனு அளித்து விட்டு காத்திருந்தனர்.
இதேபோல் கள்ளக் குறிச்சி உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் தொழிலாளர்கள் காத்திருந்தனர். பின்னர் விழுப்புரம் தலைமையகத்தில் கழக பொது மேலாளருடன் சிஐடியு தலைவர் ஆர்.மூர்த்தி, பொதுச் செயலாளர் எச்.ரகோத் தமன், தொமுச பொதுச் செயலாளர் பிரபா, தண்டபாணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக பணிக்கு வந்த தொழி லாளர்களுக்குகூட விடுப்பு போடப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பலவகையில் கோளாறு நடை பெற்றுள்ளதால் ஏப்ரல் மாதத்தைப் போலவே மே மாதத்திற்கும் அனைத்து தொழிலாளர்க ளுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், மேலும் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் 50 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் அனைத்து தொழிலாளர்களுக்கும் சுழற்சி முறையில் பணி வழங்கி முழு வருகை பதிவு வழங்க வேண்டுமென தொழிற்சங்கத் தலை வர்கள் வலியுறுத்தினர். இதன் மீது முறையாக நடவடிக்கை எடுப்பதாக பொது மேலாளர் உறுதி அளித்ததின் பேரில், அனைத்து பணி மனையில் இருந்த தொழிலாளர்களும் உள்ளி ருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.