tamilnadu

img

உத்தரபிரதேச அமைச்சரின் வீடு இருக்கும் தெரு முழுவதும்  காவி வண்ணம் பூசி அராஜகம்


உத்தரபிரதேசத்தில் அமைச்சர் வசிக்கும் வீடு இருக்கும் தெரு முழுவதும் காவி நிற வண்ணம் பூச வற்புறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தில் உள்ள ஒரு தெருவில் அம்மாநில அமைச்சர் நந்த கோபால் நந்தி வசித்து வருகிறார். நேற்று இவர் வசித்து வரும் தெருவில் ஒரு கும்பல் அனைத்து வீட்டின் சுவற்றிலும் காவி பெயிண்ட் அடித்தனர். பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த கும்பல் அடாவடித்தனமாதக  தொடர்ந்து காவி கலரை அடித்துக் கொண்டிருந்தனர். சிலர் புகார் தெரிவிப்பதற்காக செல்போனில் படம் பிடிக்கும்போது கலர் ஸ்பிரே அடித்து விரட்டினர். 
குப்தா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர்.    
இதுகுறித்து குப்தா உத்தர பிரதேச மாநில அமைச்சர் நந்த கோபால் நந்தியின் உறவினர் மீது புகார் அளித்துள்ளார். ‘‘ஒரு குடிமகனாக எனது அடிப்படை உரிமை சிதைக்கப்படக் கூடாது. என்னை அமைதியாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். நான் ஒரு வணிகர். என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. என்னுடைய வீடு காவி கலரில் இருக்க விரும்பவில்லை. நான் அவர்கள் செயலுக்கு எதிர்க்கும்போது என்னை தாக்கி, வலுக்கட்டாயமாக காவி வண்ணம் பூசி விட்டார்கள்
’’ என்றார்.