tamilnadu

img

உ.பி: அரசு காப்பகத்தில் இருந்த 57 சிறுமிகளுக்கு கொரோனா - 5 சிறுமிகள் கர்ப்பம் 

உத்தரபிரதேசத்தில் அரசு காப்பகத்தில் தங்கியிருந்த 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5சிறுமிகள் கர்ப்பமாக உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 
உத்தரபிரதேசம், கான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு சிறுமிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 57 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுமிகளில் ஐந்து பேர் கர்ப்பமாக இருப்பதும், ஒரு பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய்த் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த கான்பூர் மாவட்ட நீதிபதி ராம் திவாரி கூறியதாவது:-
இந்தக் காப்பகத்தில் கர்ப்பமான  ஏழு சிறுமிகள் வசித்து வந்தார்கள். அவர்களில் ஐந்து பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தச் சிறுமிகள் காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டபோதே கர்ப்பமுற்று இருந்தனர். குழந்தைகள் நல அமைப்பு பரிந்துரை செய்யப்பட்டதன் பேரில் அவர்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள். குழந்தைகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏதாவது நிகழ்ந்ததா என்று விசாரித்து வருகிறோம் என்று கூறினார்
இந்த ஐந்து சிறுமிகளில் இரண்டு பேர் எல்எல்ஆர் மருத்துவமனையிலும் மற்ற 3 சிறுமிகள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.