tamilnadu

img

சுற்றுலா பயணிகள் பார்வையிட 6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மீண்டும் திறப்பு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை  கட்டுப்படுத்தும்  நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி தாஜ்மஹால் மூடப்பட்டது. மத்திய அரசு தற்போது ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலை பார்வையிட ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் தனிமனித இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல், முககவசம் அணிவது உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் டிக்கெட்களை வாங்க வேண்டும் டிக்கெட் கவுண்டர் திறந்திருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் திறக்கப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது