உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் 25 பள்ளிகளில் வேலை செய்வதாக ரூ1 கோடி வரை சம்பளம் பெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் மெயின் புரியைச் சேர்ந்த அனாமிகா சுக்லா என்ற ஆசிரியர் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்தியாலயா பள்ளியில் பணியாற்றினார். ஆனால் அவர் பெயர் சகரான்பூர் பாக்பத், அம்பேத் நகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 பள்ளிகளில் இடம்பெற்றது. 25 பள்ளிகளில் இருந்து அனாமிகா கடந்த 13 மாதங்களாக அவர் 1 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார். இச்சம்பவம் உத்தரபிரதேச மாநில கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சதீஸ் திவேதி தெரிவித்துள்ளார்.