லக்னோ, மே 18-வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடிவெற்றி பெறுவதைவிட,அவர் தோற்றுப்போனால் தான் அது வரலாற்று சிறப் பாக இருக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர்பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:“பிரதமர் மோடியின் குஜராத் மாதிரி வளர்ச்சித் திட்டம்என்பது உத்தரப் பிரதேசத் தில் எடுபடவில்லை; இங்கு வறுமையும் ஒழியவில்லை. வேலைவாய்ப்புப் பிரச்சனையும் தீரவில்லை; இது அப்பட்டமான வஞ்சகம். வளர்ச்சிக்குப் பதிலாக மோடி - யோகி என்ற இரட்டை இன்ஜின் கொண்டஇந்த அரசாங்கம் மதக் கலவரங்களையும், வெறுப்பு மற்றும் வன்முறையையும் மட்டுமே கொடுத்திருக்கிறது.கிழக்கு உத்தரப்பிரதேசத்திற்கு உட்பட்ட கோரக்பூர் முதல்வர் யோகியின் தொகுதி, வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதி. ஆனாலும், கிழக்கு உத்தரப் பிரதேசம் தொடர்ந்து வஞ் சிக்கப்பட்டே வருகிறது.பிரதமர் மோடி வாரணாசியில் வெற்றி பெறுவதைவிட தோல்வியுறுவதே வரலாற்று சிறப்பாக இருக்கும். 1977-இல் ரேபரேலியில் இந்திரா காந்தியை தோற்கடித்து மொரார்ஜி தேசாய் வெற்றி பெற்றார். அப்போது, இந்திராவின் தோல்வி வரலாறு ஆனதுபோல் மோடியின் தோல்வியும் வரலாறாகும்.”இவ்வாறு மாயாவதி பதிவிட்டுள்ளார்.