tamilnadu

img

பசுமாடு ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறதாம்...

டேராடூன்:
உத்தரகண்ட்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிவேந்திர சிங் ராவத்என்பவர் முதல்வராக இருக்கிறார்.இந்நிலையில், டெராடூனில் நடந்த ஒருவிழாவில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போதுதான் பசு மாட்டுப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து, தானே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த ‘விஞ்ஞானி’ போல பேசியுள்ளார்.“மாடுகள் ஆக்சிஜனை உள்ளிழுத்துஆக்சிஜனை மட்டுமே வெளியேற்றுகின் றன; ஒரு பசுவை தடவிக் கொடுப்பதன் மூலம் மனிதர்களாகிய நாம் நமது சுவாசப்பிரச்சனைகளைக் குணப்படுத்த முடியும்” என்றெல்லாம் கதையடித்துள்ளார். இதற்கெல்லாம் உச்சமாக, “பசுவுடன் நெருக்கமாக இருந்தால் காசநோயை குணப்படுத்த முடியும்” என்றும், மருத்துவஉலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தின் பாஜகதலைவரும் நைனிடால் தொகுதி எம்எல்ஏவுமான அஜய் பட், சில நாட்களுக்கு முன்புதான் அவரது‘ஆராய்ச்சி’ முடிவுகளை வெளியிட்டார்.கர்ப்பிணிப் பெண்கள் உத்தரகண்ட்டின், பாகேஸ்வர் மாவட்டத்தில் உள்ள ‘கருட் கங்கா’ ஆற்றின் நீரைக் குடித்தால் சிசேரியன் பிரசவத்தை தவிர்க்கலாம்; இந்த ஆற்றில் உள்ள கல்லை எடுத்து,பாம்பு கடித்த இடத்தில் உரசினால், விஷமேமுறிந்துபோகும் என்றெல்லாம் கூறியிருந்தார். இதற்கே தீர்வுகாண முடியாமல், மருத்துவர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், உத்தரகண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் ‘கண்டுபிடிப்புகள்’, மருத்துவர்களை தலைமுடியை பிய்த்துக் கொள்ள வைத்துள்ளது.இதனிடையே, ‘உத்தரகாண்ட் மாநிலமக்கள் மத்தியில் பசுவின் மீது உள்ள பொதுவான நம்பிக்கை’ குறித்தே முதல்வர் பேசியதாக, அரசு அதிகாரி ஒருவர் சமாளித்துள்ளார்.

;