உதகை, ஜூலை 15 - கடந்த 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத் தையே அமல்படுத்த வேண்டும். ஜேக்டோ ஜியோ போராட் டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான பலி வாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே.முத்துக்குமார் தலைமை வகித் தார். ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சலீம், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஏ.ஆர்.ஆசரா, பொருளாளர் கே.ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஜி.பழணியம்மாள், மாவட்டசெயலாளர் ஏ.சேகர், மாவட்டப் பொருளாளர் கே.புகழேந்தி, துணைத் தலைவர் பி.எஸ்.இளவேணில், என்.ராமஜெயம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தின் இறு தியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.