உடுமலை, ஜூன் 14- வருவாய் தீர்வாயத்தில் மனு கொடுக்க வரும் பொது மக்களுக்கு அரசின் நல திட்ட விபரங்கள் குறித்தும், அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் இருந்த தால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். உடுமலை வட்டாட்சியர் அலுவல கத்தில் 13ம் தேதி முதல் 27ம் தேதி வரை பிர்க்கா வாரியாக வருவாய் தீர்வாயம் நடை பெறுகிறது. இதில் தங்களுக்கு பல நாட்கள் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகளை மனுவாக பொதுமக்கள் தருவார்கள். அதில் சில பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் . இப்படி மக்கள் நலனுக்காக நடைபெறும் வருவாய் தீர்வாய நிகழ்வு உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயரளவில் நடப்பதாக மக்களுக்கு உணர்வு ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில், பொது மக்கள் பயன்படும் வகையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு நிழல்குடை , குடிநீர் மற்றும் வருவாய் துறைவாரியாக மக்க ளுக்கு கிடைக்கும் நல திட்டங்கள் குறித்தும், எப்படி விண்ணப்பம் செய்வது குறித்தும் மக்கள் பார்வைக்கு தகவல் பலகைகள் வைப் பார்கள். ஆனால் இந்த முறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடை பெறுவதுக்கான எந்த முன் ஏற்பாடு களையும் செய்யாமல் இருந்தன. இதனால் மனு அளிக்க வந்த பொது மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளானர்கள்.