வழக்கறிஞர்கள் சங்கம் நன்றி
மதுரை, மார்ச் 20- தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ. 3ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலப்பொதுச் செயலாளர் என்.முத்துஅமுதநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:- இந்த கோரிக்கை தொடர்பாக சேலம், விழுப்புரத்தில் கோரிக்கை மாநாடுகள் நடத்தினோம். மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் இளம் வழக்கறிஞர்களின் கோரிக்கை களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில் இந்த உதவித் தொகை கிடைத்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.