tamilnadu

img

சாலையில் திரியும் வாகனங்கள்: வர்ணம் பூசிய காவல்துறை

நாகப்பட்டினம், ஏப்.13- ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றித் திரிந்த 50க்கும் மேற் பட்ட வாகனங்களுக்கு மஞ்சள் வர்ணம் பூசி காவல் துறையினர் எச்சரித்தனர். ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் தேவையின்றி இருசக்கர வாக னங்களில் சுற்றித் திரிவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனைகளை காவல் துறையினர் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அத்தியாவ சிய பொருள்  கள் வாங்க வந்ததாக கூறி சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த இளை ஞர்களை  காவல் துறையினர் மடக்கி பிடித்த னர்.  பின்னர், தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த இருசக்கர வாகன ஓட்டிக ளுக்கு அபராதம் விதித்த காவல் துறையி னர், அந்த வாகனங்களில் மஞ்சள் வர்ணம்  பூசி நீண்ட நேரம் காக்க வைத்து எச்ச ரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

இம் மாவட்டத்தில் 1,848 இருசக்கர வாகனங்களும், 43 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு, சாலைகளில் சுற்றித் திரிந்த 2 ஆயிரத்து 800 நபர்கள் மீது வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.