சென்னை:
ஜூன் மாதம் முழுவதும் காணொலிக்காட்சி மூலம் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்துக்கு பின்னர் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. பின்னர் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப் பட்டதை தொடர்ந்து அந்த அவசர வழக்குகளும் காணொலி காட்சி மூலமே விசாரிக்கப்பட்டன.இந்த நிலையில், சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் அனைத்து வகையான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
ஐந்து வழக்கறிஞர்கள் மட் டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு அனுமதி கிடையாது. அதேநேரம், இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் காணொலி காட்சி மூலமாக மட்டுமே விசாரிப்பார்கள்.இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை ‘இ-மெயில்’ மூலம் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகள் எல்லாம் சம்பந்தப் பட்ட நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும். அவர் இந்த வழக்குகளை காணொலி காட்சி மூலமே விசாரிப்பார்கள். ஜூன் மாதம் முழுவதும் இந்த நிலையே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களிலும்...
கொரோனா தொற்று அச்சுறுத் தலை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில், வீடியோ கான்பரன் சிங் மூலம் மட்டுமே வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்க ளின் கோரிக்கை மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக் களை பெற்று, சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு கூடி ஆலோசனை செய்தது.இதில், அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளும், நீதிமன்ற அறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன் சிங் மூலம் விசாரிக்கலாம். தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர், சிவகங்கை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.