சென்னையில் மீண்டும் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் இல்லை என்று தமிழகஅரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மீண்டும் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் இன்று நோய்க்கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னைக்கு இபாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலும் உண்மை இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.