tamilnadu

img

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது சென்னை உயர் நீதிமன்றம்

 

சென்னைஉயர்நீதிமன்றத்தில்   பெரம்பூரை சேர்ந்த வசந்தகுமார் தாக்கல் செய்த மனுவில்  அத்திவரதர் சிலையை வெளியே எடுப்பது, பொதுமக்களின் தரிசனத்துக்காக வெளியில் வைப்பது என்பது தொடர்பாக கடுமையான ஆகம விதிகள் எதுவும் இல்லை. எனவே பொதுமக்களின் விருப்பத்தின்படி தரிசனம் செய்யும் நாள்களை 48 நாள்கள் என்று இல்லாமல் நீட்டிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக்கோரி கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தலைமைச் செயலாளருக்கு மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அத்திவரதர் சிலையை மேலும் சில நாள்கள் பொதுமக்கள் தரிசனம் செய்யும் வகையில் வெளியில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். வி.கிருஷ்ணசாமி என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள்  நீதிபதிகள் மனீக்குமார் , சுப்பிரமணிய பிரசாத்  தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் கூறினர்.