புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ரயிலில் உணவு குடிநீர் இன்றி தொழிலாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஏற்கனவே இருந்த நோய் காரணமாகவே சில புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்ததாக மத்திய அரசு வாதிட்டது.
இதையடுத்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு வரும் ஜூன் 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.