tamilnadu

img

அனுமதியின்றி செயல்படும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும்

மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை,ஜன.11- அனுமதியின்றி செயல்படும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்றும்   மூடப்பட்ட ஆலைகள் அனுமதி பெற்றாலும் நீதிமன்ற அனுமதியில்லாமல் மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையை அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழ்நாடு முழுவதும் குடிநீர் ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த அறிக்கை யை பொதுப்பணித்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  நிலம் மற்றும் நிலத்தடி நீர்வள புள்ளிவிவர மைய தலைமைப் பொறியாளர் பிரபாகரன் பிப்ரவரி  6 ஆம் தேதி நேரில் ஆஜ ராகி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மூடப்பட்ட  ஆலைகள் அனுமதி பெற்றாலும் நீதிமன்ற அனுமதியில்லா மல் மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என்றும் உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 

;