tamilnadu

img

உயர்நீதிமன்றம் கண்டனம்

சுபஸ்ரீ   மரணம்:   மாநகராட்சி,  காவல்துறைக்கு 

சென்னை, செப்.23- பேனர் விழுந்து சுபஸ்ரீ பலி யான சம்பவம் தொடர்பாக மாநக ராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் இதுவரை குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று சென்னை உயர் நீதிமன்றம்  கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை யில் கடந்த 12 ஆம் தேதி அதிமுக- வினர் வைத்த பேனர் விழுந்து.  இளம் பொறியாளர் சுபஸ்ரீ பலியா னார். அதிமுக பிரமுகரும், முன்  னாள் கவுன்சிலருமான ஜெய கோபால் இல்லத்திருமண விழா வுக்காக வைக்கப்பட்டிருந்த பேனரே சரிந்து விழுந்தது. இதை யடுத்து அவர் மீதும், அனுமதி யின்றி பேனர் வைக்க அனுமதி வழங்கிய அதிகாரி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 13 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் விசாரித்தனர். அப் போது, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இந்த நிலையில், இளைய தலைமுறை என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் கூறியிருப்பதாவது:- சுபஸ்ரீ மரணத்துக்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி உண்ணாநிலைப் போராட்  டம் நடத்த முடிவு செய்தோம். இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு சென்னை காவல்  ஆணையரிடமும் மனு கொடுத்  தோம். ஆனால், அந்த மனுவை  பரிசீலிக்காமல் அதிகாரிகள் இழுத்  தடிக்கின்றனர். எனவே, எங்கள் போராட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு அதில் கூறி யிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு திங்களன்று (செப்.23) விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் கூறும்போது, ‘சுபஸ்ரீ மரண சம்பவம் நடந்து 11  நாட்களுக்கு மேலாகியும் குற்ற வாளியை இதுவரை காவல்துறை யினர் கைது செய்யவில்லை. அவர் அதிமுகவை சேர்ந்தவர் என்  பதால், அலட்சியமாக செயல் படுகின்றனர். இதை கண்டித்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் அனு மதி தர காவல்துறையினர் மறுக் கின்றனர்’ என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடு தல் குற்றவியல் வழக்கறிஞர் அய்யப்பராஜ் கூறும்போது, ‘ஏற்கனவே, இதுதொடர்பான வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட  டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது’ என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி ரமேஷ் கூறியதாவது:- டிவிசன் பெஞ்சில் நிலுவை யில் இருந்தாலும், இந்த வழக்கை  விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு (எனக்கு) முழு அதிகாரம் உள்ளது. அதனால், இந்த வழக்கு  தொடர்ந்து விசாரிக்கப்படும். மேலும், பேனர் வைத்தவரை இது வரை கைது செய்யவில்லை என்று  மனுதாரர் கூறுகிறார். அதே நேரம், சட்ட விரோதமாக பேனர்  வைத்ததை தடுக்காத, பேனரை உடனே அகற்றாத மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் இதுவரை கிரிமினல் நடவடிக்கை எடுக்க வில்லை?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு விரிவான பதிலை வருகிற 25  ஆம் தேதி (புதன்கிழமை) மனு வாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.