tamilnadu

img

அரசு பணிகளில்  இட ஒதுக்கீடு அடிப்படையில்  பதவி உயர்வு வழங்க  தடை - உச்சநீதிமன்றம்

அரசு பணிகளில்  இட ஒதுக்கீடு அடிப்படையில்  பதவி உயர்வு வழங்க  தடை - உச்சநீதிமன்றம்
அரசு பணிகளில்  இட ஒதுக்கீடு அடிப்படையில்  பதவி உயர்வு வழங்க  கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை பொறியாளர் இருவரது வழக்கில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கோரும் தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் பணியிடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கூடாது என்றும் தகுதி அல்லது பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.