சென்னை:
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி தேனி தொகுதி எம்பி ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள
வைக்கான தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார், 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.இந்த தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதில், “வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற் றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான வாதங்கள் முடிவுற்ற நிலையில், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென்ற ரவீந்திரநாத்தின் மனு மீது வெள்ளியன்று தீர்ப்பளித்த நீதிபதிஎம்.எஸ் ரமேஷ், ரவீந்திரநாத்க்கு எதிரான தேர்தல் வழக்கு ஆரம்பகட்டத்தில்உள்ளது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறி தேர்தல்வழக்கை ரத்து செய்ய கோரிய ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதன் காரணமாக எம்பி தேர்தலில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.