புதுதில்லி,நவ.17- உச்சநீதிமன்ற 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நவம்பர் 18 அன்று பதவியேற்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம் நவம்பர் 17 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு எஸ்.ஏ.பாப்டேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் எஸ்.ஏ. பாப்டே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திங்களன்று பதவியேற்கிறார்.இவர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 வரை பதவியில் நீடிப்பார்.