tamilnadu

img

இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் காசியின் மொபைல் போன் மெமரி கார்டு கைப்பற்றப்பட்டது

இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம்

நாகர்கோவில், ஜூன் 20- குமரி மாவட்டத்தை சேர்ந்த காசி சமூக வலைத்தளங்கள் மூலமாக இளம்பெண்களை தொடர்புகொண்டு காதலிப்பது போல் நடித்து அவர் களோடு தனியாக இருப்பதை ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தார். இதில் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரில் காசி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து நான்கு பெண்களும் ஒரு இளைஞரும் கொடுத்த புகாரில், ஒரு போக்சோ வழக்கு 2 பாலியல் பலாத் கார வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு என ஆறு வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டது. 

இதனிடையே காசி குண்டர் சட்டத் தில் கைது செய்யப்பட்டார் . மேலும் இந்த வழக்குகள் சிபிசிஐடி காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி காவல் துறையினர் காசியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டதன் அடிப்படையில் ஐந்து நாள் காவல் துறையினர் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறை யினர் காசியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காசியின் சிபிசிஐடி காவல் வெள் ளிக்கிழமையுடன் முடிந்ததை தொட ர்ந்து காசி மற்றும் அவரது நண்பர் டைசன் ஜினோ ஆகியோருக்கு நீதிபதி உத்தரவு படி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட் 19 பரி சோதனை செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். சிபிசிஐடி காவல் துறையினர் காசி யின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டி ருந்த மெமரி கார்டு, மொபைல் போன் மற்றும் காசிக்கு பல பெண்களால் அளிக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்களை கைப்பற்றியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மெமரி கார்டு உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.