tamilnadu

img

நீதிபதி தஹில் ரமணி இடமாற்றலை ரத்து செய்ய வேண்டும்

ஜி.ராமகிருஷ்ணன், இரா. முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை, செப். 8 - சென்னை உயர்நீதின்ற நீதிபதி தஹில் ரமணி இடமாற்றலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலி யுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் 75 நீதிபதிகள் உள்ளனர். இந்நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக  தஹில் ரமணியை 2 நீதிபதி கள் மட்டுமே உள்ள மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றியுள்ளனர். மூத்த  நீதிபதியை இவ்வாறு மாற்றியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். கொலிஜியத்தின் இடமாறுதல் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதி தஹில் ரமணி கடிதம் எழுதியிருக்கிறார். அதனை கொலிஜியம் நிராகரித்துள்ளது. இது நீதிபதிகளை யும், வழக்கறிஞர்களையும் அதிர்ச்சி க்குள்ளாக்கி உள்ளது. இந்த இடமாறு தலுக்கான பின்னணி விரைவில் வெளி வரும்.  இருப்பினும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது உத்தரவை மறுபரிசீலனை செய்து தஹில் ரமணியை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே பணியாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகை யில், “மத்தியில் பாஜக பொறுப்பேற்ற 3 மாதத்தில் மனசாட்சிக்கு விரோதமாக பணி யாற்ற முடியாத காரணத்தால் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது பதவியை ராஜி னாமா செய்துள்ளனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தஹில் ரமணி மாற்றப்பட்டிருப்பது அநீதி யானது என்று மூத்த வழக்கறிஞர்களே கருதுகிறார்கள். இது பழிவாங்கல் நடவடிக்கை என்று குடியரசுத் தலை வருக்கும், உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்கள். எந்த கடிதத்திற்கும் மதிப்பில்லாததால் தனது மனசாட்சிப்படி ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார். ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பிறதுறை அதிகாரிகளாக இருந்தாலும் மனசாட்சி உள்ளவர்கள் இனி பணியாற்ற முடியாது என்பது 3 மாத காலத்தில் நிரூ பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகள் வரும் என்றும் அவர் கூறினார்.