ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 35 குழந்தைகளுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுகுறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி கன்வில்கர் தலைமையில் விசாரணைக்கு வந்த போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த போதும் குழந்தைகளுக்கு எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு தலைமைச்செயலாளர் வரும் திங்கள் கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.