கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவார பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 4000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு தடை கோரி மலை வாழ் மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நிலச்சரிவு மற்றும் வன விலங்குகள் அபாயம் உள்ள பகுதிகளில் வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து 3 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.