குடும்பத்தின் சொத்து பங்கீட்டில் பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்குவது குறித்த 2005 ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் குடும்ப சொத்தை பிரித்து பங்கு வழங்கும் போது ஆண் பிள்ளைகளைப்போலவே பெண்களுக்கும் சமமாக பங்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.