tamilnadu

img

புதிய மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்பு செய்த பின்னர் உள்ளாட்சித் தேர்தலை நடத்துக!

உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு

சென்னை, நவ.29 தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு  உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் அறிவிக்கையை வெளியிடு மாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய இடைக்கால மனு வியாழக் கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத் தில் திமுக தரப்பில் ஏற்கெனவே மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இந்த மனு மீதான விசார ணை நிலுவையில் உள்ளது. இந்நிலை யில், இது தொடர்பான வேறு ஒரு வழக்கில்,  “அனைத்துச் சட்ட நடை முறைகளும் முடிந்த பிறகு, தமிழ கத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவ தற்கான அறிவிக்கை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்’ என்று  உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டது.  இந்நிலையில்,  உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய இடைக் கால மனுவில், “உள்ளாட்சித் தேர்தல்  நடத்தும் விவகாரத்தில் வார்டு மறு சீரமைப்புப் பணிகள், இடஒதுக்கீடு, சுழற்சி நடைமுறை மற்றும் இதர சட்டத் தேவைகள் ஆகியவற்றை மேற் கொள்ளுமாறு எதிர்த் தரப்பினரான தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணை யம்,  தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும்.  அதன் பிறகே தேர்தல் நடத்தும் அறிவிக்கையை வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜெயசுகின்  என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நவம்பர் 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணை யம் சார்பில் வழக்கறிஞர்கள் நரசிம்மன், பார்த்திபன் ஆகியோர் ஆஜராகி,  உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற் காக மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கேட்டனர்.  இதற்கு மனுதாரர் ஜெயசுகின் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, “டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்’’ என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார் பில் ஆஜரான வழக்குரைஞர் நர சிம்மன் தெரிவித்தார். அப்போது திமுக சார்பில் வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, “தமிழகத்தில் 9 மாவட்டங் களுக்கான வார்டு மறுசீரமைப்பு செய்ய ப்படவில்லை. ஆகவே, அதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்’’ என்றார். இதையடுத்து,  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கு வரும் டிசம்பர் 13 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது. அதற்குள், அனைத்து சட்ட  நடை முறைகளும் முடிந்த பிறகு அறிவிக்கை வெளியிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான விஷயங்களும்  ஒன்றாகச் சேர்க்கப்பட்டு  உரிய அமர்வு முன் விசாரணைக்குப்  பட்டி யலிடப்படும்’’  எனத் தெரிவித்திருந்த னர். இந்நிலையில், திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் புதிய இடைக் கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.