சென்னை,அக்.29- திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பான மனுவை விசா ரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆழ் துளை கிணறு தொடர்பாக உச்சநீதி மன்றம் முன்பு வெளியிட்ட உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. திருச்சி அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் தவறி விழுந்து உயிரிழந்தது மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும்போது அவர்களை காப்பாற்ற 6 விதமான தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அடுத்த சில மணி நேரத்தி லேயே உயிருடன் குழந்தையை மீட்டு விடலாம். ஆனால் மணப்பாறை நடுக் காட்டுப்பட்டி சம்பவத்தில் இந்த தொழில் நுட்பத்தில் ஒன்றை கூட பயன் படுத்தவில்லை. காலதாமதம் ஏற்பட்ட தால் ஒரு சிறுவனின் உயிர் பறிபோய் விட்டது என்றும் உச்ச நீதிமன்றம் 2009-2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த மனு, சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராய ணன், சேஷசாயி அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர் பலி வேண்டுமா என கேள்வி யெழுப்பினர். அரசு கொண்டு வந்த விதி கள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரி கள் ஆய்வு செய்வதில்லை என்றும் நீதி பதிகள் அதிருப்தி வெளியிட்டனர். மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், ஒவ்வொரு தனி மனிதனும் சமூக பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றனர். இதையடுத்து, ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படு கிறதா?, இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது? பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகளின் எண்ணிக்கை என்ன? விதிகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது? ஆகிய கேள்விகளை எழுப்பி, நவம்பர் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர். ஆழ்துளை கிணற்றில் சிக்கும் சிறார்களை மீட்க புதிய தொழில்நுட்பங் களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் 2009-2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமி ழக அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர்.