tamilnadu

img

வனத்துறையினர் தாக்கியதால் பலி என வழக்கு:தென்காசி விவசாயியின் உடலை இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்தது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை, ஜூலை 28- தமிழகத்தில் மாலை நான்கு மணிக்கு மேல் உடற்கூராய்வு செய்யக்கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறும் வகை யில் தென்காசி விவசாயியின் உடலை அவசர அவசரமாக இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டது ஏன்  என்று சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தென்காசி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்த பாலம்மாள் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தி ருந்தார். அதில்,” எனது கணவர் அணைக்கரை முத்து வாகைகுளம் பகுதியில் விவசாயம் செய்துவந்தார். ஜூலை 22-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வனத்துறையைச் சேர்ந்த அதிகாரி நெல்லை நாயகம் தலைமையில் முருகசாமி, சக்தி முருகன், பசுங்கிளி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி சிவசைலம் பகுதியில் உள்ள பங்களா குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இதையறிந்து எனது மகன் நடராஜன் சிவசைலம் பகுதியில் உள்ள வனத்துறை அலு வலகத்துக்கு சென்றபோது எதிர்புறத்தில் வன அலுவலர்கள் வாகனம் வந்துவிடவே உட னடியாக வாகனத்தில் ஏறுமாறு கூறியுள்ளனர்.

தொடர்ந்து, தென்காசி அரசு மருத்துவ மனையில் எனது கணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரி வித்துள்ளனர். எனது கணவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையில் திடீரென உயிர் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. இதனடிப்படையில் காவல் நிலையத்தில் ஜூலை 23-ஆம் தேதி எனது மகன் நடராஜன் புகார் அளித்தார். நீதித்துறை நடுவர் விசாரணையில் 18 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் குடும்பத்தாரிடமும் நீதித்துறை நடுவர் கையெழுத்து பெற்று கொண்டார். இந்த நிலையில் 23-ஆம் தேதி இரவே அவசரமாக உடற்கூராய்வு செய்யப்பட்டுள் ளது. தடய அறிவியல் துறை தலைவர் டாக்டர் செல்வமுருகன் இருக்கும் நிலையில், அவரது தலைமையில் இல்லாமல் இந்த உடற்கூறு ஆய்வு நடைபெற்று உள்ளது. வனத்துறையினர் தாக்கியதன் காரணமா கவே கணவர் உயிரிழந்ததாக சந்தேகம் உள்ளது.

ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு உயிரிழந்த அணைக்கரை முத்து வின் உடலை தடய அறிவியல் துறை மருத்து வர் குழு உடற்கூராய்வு செய்யவும், தொடர்பு டைய வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அணைக்கரை முத்து 23-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்த நிலையில், வனத்துறை சார்பில் அவரது உயிரிழப்பு தொடர்பாக எவ்வித புகாரும் அளிக்கப்பட வில்லை. குடும்பத்தினருக்கும் விசாரணை க்கு அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பான உரிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. உடற்கூராய்வு  24 ஆம் தேதி காலையே நடைபெறும் என நீதித்துறை நடுவர் தெரிவித்த நிலையில், இரவே உடற்கூராய்வு செய்ய வேண்டிய தேவை இல்லாத நிலையில், 23ஆம் தேதியே இரவோடு இரவாக உடற் கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும், அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களை வலுப்படுத்துவதாகவே அமைகிறது” என வாதிட்டார்.

அரசுத்தரப்பில்,” அணைக்கரை முத்து வின் விவசாய நிலத்தைச் சுற்றி சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டி ருந்ததன் காரணமாகவே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி இப்போது பிரச்சனை அதுவல்ல. உடற்கூராய்வு  எப்போது நடை பெற்றது? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத்தரப்பில் 23-ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு உடற்கூராய்வு  முடிந்தது” எனத் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, தமிழகத்தில் மாலை நான்கு மணிக்கு மேல் உடற்கூராய்வு செய்யக் கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் எவ்வாறு உடற்கூராய்வு செய்யப்பட்டது? எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு அரசுத்தரப்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்கா ணிப்பாளர் தரப்பில், அணைக்கரை முத்து வின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடு வதால், சட்ட ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் வகையில் விரைவாக உடற் கூராய்வு செய்யுமாறு திருநெல்வேலி மருத் துவக்கல்லூரி முதல்வரிடம் கோரப்பட்டது. அதன் அடிப்படையிலேயே உடற்கூராய்வு  செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, உடற்கூராய்வு  அறிக்கை மற்றும் வீடியோ பதிவுடன் நிலை  அறிக்கையை, சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய  திருநெல்வேலி அரசு மருத்துவமனை முதல்வர், தென்காசி காவல் கண்காணிப்பா ளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று (புதன்) ஒத்திவைத்தார்.

;