tamilnadu

img

கோவை சிறுமி பாலியல் வன்கொலை வழக்கு

குற்றவாளிக்கு மரண தண்டனை  போக்சோ நீதிமன்றம் வழங்கிய முதல் தீர்ப்பு

கோவை, டிச.27- கோவை சிறுமி பாலியல் வன் கொலை செய்யப்பட்ட வழக்கில்  குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கோவை துடியலூரை அடுத்த பன்னிமடையில் கடந்த மார்ச்  மாதத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். தமிழ கத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தில் சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான  வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. பின்னர்  போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டது.  இந்நிலையில் வழக்கு விசார ணை முடிந்த நிலையில் வெள்ளி யன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா, சாட்சி விசாரணைகளின் அடிப்படையில்  சந்தோஷ்குமார்  குற்றவாளி என அறிவித்தார். பிற்பகலில் நீதிபதி ராதிகா குற்ற வாளிக்கான தண்டனை விபரத்தை அறிவித்தார். இதில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு  மரண தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை, 7 ஆண்டு சிறை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும்  ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீப்பளித்தார்.

மற்றொரு குற்றவாளி: விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு 

உயிரிழந்த சிறுமியின் தாயார் வியாழனன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்த கொடூர  சம்பவத்தில் சந்தோஷ் குமார் ஒரு வர் மட்டும் குற்றவாளி அல்ல.  மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்ப தாக டிஎன்ஏ அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது. ஆகவே, அந்த குற்ற  வாளியும் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அந்த மனு மீதும் மேல் விசாரணை நடத்தவும் நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார். 

மாதர் சங்கத்திற்கு சிறுமியின் தாயார் நன்றி

இந்த தீர்ப்பு குறித்து சிறுமியின் தாயார் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தீர்ப்பை வரவேற்கிறேன். மேலும் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருக் கிறார் என்பது தெரியவந்துள்ளதால் அவரையும் கைது செய்து உரிய தண்டனை வழங்கினால் மட்டுமே இந்த தீர்ப்பை முழுமையாக நான் வரவேற்பதாக இருக்கும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து மாதர்  சங்கத்துடன் இணைந்து போராடு வேன். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எனது நீதிக்கான போராட்டத்  தில் உடன் நிற்கும் மாதர் சங்கத்தின ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். முன்னதாக, சிறுமி வன்கொலை வழக்கின் தீர்ப்பு வெளியாவதை யொட்டி நீதிமன்றத்தில் அனைத் திந்திய ஜனநாயக  மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமையில் மாதர் சங்க நிர்வாகி கள் பலர் வந்திருந்தனர். தீர்ப்பு வெளி யான பின்னர், தீர்ப்பை வர வேற்று நீதிமன்ற வளாகத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

பி.ஆர். நடராஜன் எம்.பி., பேட்டி

கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர் நடராஜன் கூறுகை யில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு  நீதி கிடைக்க வேண்டும் என்கிற உறுதியோடு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வந்தது. இதன் விளைவாகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை  வரவேற்கிறோம். மாதர் சங்கத்தின ருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இவ்வழக் கில் மற்றொருவர் சம்பந்தப்பட்டி ருப்பது தெரியவந்துள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை  நடத்தி  குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தார்.

முதல் தீர்ப்பு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் டிசம்பர் 18 அன்று  போக்சோ வழக்குகளை விசாரிக்க புதிதாக  சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது. இந்த சிறப்பு நீதி மன்றத்தில் வழங்கப்படும் முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

 

;