புதுதில்லி,செப்.22- தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்தின் நான்கு புதிய நீதிபதிகள் திங்களன்று பதவியேற்கின்றனர். இதனால் உச்சநீதிமன்றத்தில் முழு அள வில் நீதிபதிகள் இடம்பெற வுள்ளனர். இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதி பதியாக உள்ள வி.ராமசுப்பிர மணியம், பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதி பதியாக உள்ள கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.ரவீந்திர பட் மற்றும் கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் பதவியேற்கின் றனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், புதிய நீதிபதி களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த பானு மதி உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக் கது. ராமசுப்பிரமணியன் பதவி யேற்பதையடுத்து தமிழகத் தச் சேர்ந்த நீதிபதிகளின் எண் ணிக்கை இரண்டாக உயரும்.