tamilnadu

img

காஷ்மீர் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல உதவ வேண்டும்

ஐ.நா.சபைக்கு மலாலா  வேண்டுகோள்

லண்டன்,செப்.15- காஷ்மீரில் குழந்தைகள் மீண்டும்  பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற மலாலா தெரிவித்துள்ளார்.  மத்திய பாஜக அரசு காஷ் மீருக்கான  சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு காஷ்மீர் மக்களும்  அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். 40 நாட்கள் கடந்த பிறகும் அங்கு நிலைமை சீராக வில்லை. பள்ளிகள் இன்னும் திறக்க வில்லை. பல்வேறு பகுதிகளில்  இண்டர்நெட் சேவை துண்டிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என்று மலாலா ஞாயிறன்று பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் அமைதி நிலவ ஐக்கிய நாடுகள் சபை தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் குரல்களை செவிமடுத்து கேட்க வேண்டும். மேலும், 40 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு பாதுகாப்பாக செல்லும் வகையில் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.