உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் இதுபற்றி கூறிய போது “1918ல் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸை விட இது அதிக அளவில் பரவியுள்ளதாகவும், அதனால் இரண்டு ஆண்டுகளாவது இதன் தீவிரம் நீடிக்கும்” என கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் பல தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ரஷ்யா மற்றும் சீனா முதலிய நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்ததாக அறிவித்த நிலையில் ,உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழிய இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..