tamilnadu

கணவனை இழந்த பெண் வேலை கேட்டு மனு

ஈரோடு,ஜன 20- கணவரை இழந்த பெண் வேலை கேட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தார். ஈரோடு மாவட்டம், பவானி அருகே பழைய பேருந்து நிலைய குப்பம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி (28). இவரது கணவர் கண்ணன். கார் டிரைவரான இவர்  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயி ரிழந்தார். இத்தம்பதியினருக்கு, பத்து வயதுக்கு உட்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு குழந்தை மாற்றுத் திறனாளியாவர். இந்நிலையில் திங்க ளன்று தனது குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த சாந்தகுமாரி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு வேலை கேட்டு மனு அளித்தார்.  இம்மனு குறித்து சாந்தகுமாரி கூறுகை யில், கணவர் இறந்த பிறகு, குழந்கைளை  கவனிக்க வீட்டு வேலை, கூலி வேலைக்கு சென்று வந்தேன். இதனால் தனது குழந்தை களை சரிவர கவனிக்க முடியவில்லை. மேலும் எனக்கு உறவினர்களின் உதவிகள் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறேன். ஆகவே எனக்கு சத்துணவு பணி உட்பட ஏதாவது ஒரு வேலை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். இம்மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நலிந்தோர் உதவித்தொகை மற்றும் வேலை  கிடைக்க வழி செய்வதாக உறுதியளித்தாக தெரிவித்தார்.

;