tamilnadu

img

பவானியில் கழிவுநீர் கலந்த குடிநீரால் நோய் பரவும் அபாயம்

ஈரோடு, ஜூன் 4-பவானி தாலுகா பகுதிகளில்கழிவு நீர் கலந்தும், குப்பைகளாகவும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஈரோடு மாவட்டம், பவானி,  ஜம்பை பேரூராட்சியில் மக்களுக்குவிநியோகிக்கப்படும் குடிநீரில் குப்பை, புழு, பூச்சிகள் மற்றும் கழிவுநீர் கலந்து மிகவும் சுகாதாரமற்ற முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றில் இருந்து வரும்தண்ணீரை முறையாக சுத்திகரிப்புசெய்யப்படுவதில்லை. அதேபோல்மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் தேக்கி வைக்கப்படுகின்ற மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம்செய்வதில்லை. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம்ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடிநீருக்கான மாதாந்திர கட்டணம் ரூ.55 ஆக இருந்ததை ரூ.155 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.