tamilnadu

ரயில் மோதி முதியவர் பலி

ஈரோடு, ஏப்.12- ரயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சங்ககிரியை அடுத்த வீரபாண்டி ரயில் நிலையத்திற்கும் மகுடஞ்சாவடி ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ரயில் மோதி அவர் இறந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது ஓடும் ரயிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்று தெரியவில்லை. இது குறித்து ஈரோடு ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;