tamilnadu

img

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தனியார், அரசு பேருந்து ஓட்டுநர்களிடையே மோதல்

கோபிசெட்டிபாளையம், செப்.19- கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளின் நேர பிரச்சனையில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் இருதரப்பாக மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டு நர் கணேசமூர்த்தி என்பவருக்கும், தனியார் பேருந்து ஓட்டுநர் மோகன் என்பவருக்கும் இடையே வியாழ னன்று பேருந்து இயக்கும் நேரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. இதன்பின் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அரசு பேருந்து ஓட்டுநர், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்து நர் களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கிருந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்து ஓட்டுநர் கணேச மூர்த்தியை பேருந்தினுள் வைத்து  கொலை வெறித்தாக்குதல் நடத்தி யுள்ளனர்.  இப்பிரச்சனையை தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்த தகலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி செட்டிபாளையம் காவல்துறையினர் தனியார் பேருந்து ஓட்டுநர்களை சமாதானப்படுத்தி பேருந்துகளை இயக்க வைத்தனர். மேலும், அசம் பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வரு கிறது.