tamilnadu

கனமழையால் தற்காலிக பாலம் சேதம்

கோபி, செப். 7- தமிழக – கர்நாடக மாநி லத்தை இணைக்கும் சத்திய மங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து நடை பெற்று வருகிறது. இந்நிலை யில், சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்ய னூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதியபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகி றது. இதற்காக அப்பகுதி யில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடை பெற்று வந்தது.

இந்நிலை யில், திம்பம் மலைப்பகுதி யில் பெய்த பலத்த மழை யால் தற்காலிக பாலம் உடைந்து சேதமடைந்தது. இதன் காரணமாக சத்திய மங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் மற் றும் சத்தியமங்கலம் காவல் துறையினர் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து வாக னங்களை மாற்றுப்பாதை யில் திருப்பிவிட்டனர். இதன் காரணமாக வாகனங் கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டது.