tamilnadu

img

ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு கே.சுப்பராயன் எம்.பி கடிதம்

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து திரும்பி  வர முடியாமல் சிக்கித் தவிக்கும் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைவாழ் மக்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஞாயிறன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள துருசனாம்பாளையம் கிராமத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு சீமார் புல் வெட்டுவதற்காக நீலகிரி மாவட்டம் மகனன் அருகில் உள்ள சிறூர் வனப்பகுதிக்கு 30 பேரும், ஊட்டி எப்பநாடு வனப்பகுதிக்கு 28 பேரும் என இரு குழுக்களாகச் சென்றுள்ளனர். தற்போது ஊரடங்கு, போக்குவரத்து தடை காரணமாக சொந்த ஊருக்கு வர முடியாமல்  மேற்கண்ட வனப்பகுதியில் சிக்கியுள்ளனர். எனவே இந்த 58 பேரை அவர்களது சொந்த ஊருக்கு அழைத்து வர நீலகிரி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கே.சுப்பராயன் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான விபரங்களையும் அக்கடிதத்தில் சுப்பராயன் ஆட்சியருக்கு தெரிவித்துள்ளார்.