tamilnadu

விசைத்தறி தொழிலாளி தற்கொலை

ஈரோடு, மே 19-மொடக்குறிச்சி அருகே விசைத்தறி கூடத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே புஞ்சை லக்காபுரம், கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி அம்சவேணி (26). இருவரும் லக்கா புரத்தில் உள்ள ஜெகதீஸ் என்பவரது பட்டறையில் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சனியன்று வேலைக்கு சென்ற வெங்கடேஷ் வீட்டுக்குத் திரும்பவில்லை. விசைத்தறி கூடத்திலிருந்து வீட்டிற்கு வந்த ஒருவர் அம்சவேணியிடம் வெங்கடேஷ் தூக்கு போட்டுதற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அம்சவேணி உடனடியாக பட்டறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு வெங்கடேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்த நிலையில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.