tamilnadu

img

கார் பருவ விதைப்புக்கு விதை பரிசோதனை செய்து விதைப்பீர்

ஈரோடு, ஜூன் 3-கார் பருவத்தில் விதைப்பு பணிமேற்கொள்ள உள்ள விவசாயிகள்அவசியமாக விதை பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.,வரும் கார் (வைகாசி) பருவத்தில் விதைப்பு மேற்கொள்ள, விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கார் பருவத்துக்கு ஏஎஸ்டி-16, ஏடிடீ-36, ஐஆர்-50, ஏடிடீ-43, ஏடிடீ-45 ஆகிய நெல் விதைகளை இருப்பு வைத்துள்ள விவசாயிகள், விதைகளின் முளைப்புத் திறன்,ஈரப்பதத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தரமான விதைகளைத் தேர்வு செய்துவிதைப்பதன் மூலம், சரியானஅளவு விதைகளை விதைத்து அதிக லாபம் பெறலாம்.பயறு வகைகளான உளுந்து வம்பன்–4, வம்பன்–5, வம்பன்–7, பாசிப்பயிரில் கோ–6, கோ–7,வம்பன்–2 ஆகிய ரக விதைகளைதேர்வு செய்து விதைப் பரிசோதனை செய்து விதைப்பதன் மூலம்,பயறு உற்பத்தியை பெருக்கி அதிகலாபம் பெற முடியும். எனவே விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள விதைகளின் மாதிரியை எடுத்து, ஈரோடு, வீரபத்திர வீதியில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் உரிய பரிசோதனை செய்த பின், விதைக்க வேண்டும் என ஈரோடு விதைப்பரிசோதனை நிலைய வேளாண்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.