tamilnadu

img

குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,ஜன 4- இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணாக மத்திய அரசு நிறை வேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலி யுறுத்தி இடதுசாரி கட்சியினர் பவானி அந்தியூர் பிரிவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண் டும்.தேசிய குடிமக்கள் பதிவேடு என்.ஆர்.சி கணக் கெடுப்பை கைவிட வேண்டும் போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செய லாளர் மா.பாலமுருகன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலா ளர் ஆர்.ரகுராமன், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ப.பா. மோகன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பி.பி.பழனி சாமி, ஏ.எம்.முனுசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். சிபிஐ நிர்வாகிகள் மாதேஸ்வரன் கோபால், சிபிஎம் பவானி தாலுகா செயலாளர் ஏ.ஜெக நாதன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

;