tamilnadu

img

மண் சாலையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் வேண்டுகோள்

ஈரோடு, டிச. 1-  புன்செய் புளியம்பட்டி அடுத்த வெங்கநாயகன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சாலை வசதி ஏற்ப டுத்தித்தர அப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற் றோர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். புன்செய் புளியம்பட்டி அருகே வெங்கநாயகன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர்கள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளிக்கு செல்லும் சாலை மண் சாலையாகவே இருந்து வரு கிறது. இதனால் மழை காலங்க ளில் தண்ணீர் தேங்கி சாலையே குளம் போல் காணப்படுவதால் மாணவ, மாணவியர்கள் பள் ளிக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், தேங்கி  நிற்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, மாணவ, மாண வியர்கள் பலவித நோய் தொற் றுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இப்பள்ளிக்கு தார்ச் சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.