tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்

 ஈரோடு,ஜூன் 26- ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு செங்குந்தர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஜுன் 30 ஆம் தேதியன்று (ஞாயிறு) காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற வுள்ளது. இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட வேலையளிப் பவர்கள் பங்கு பெறவுள்ளனர்.  இம்முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் இரண்டு புகைப்படம், கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடை யாள அட்டை ஆகியவற்றின் நகல்களை எடுத்து வருமாறு தெரிவிக்கப்படுகிறது. இம்முகாம் மூலம் பணியமர்த்தம் செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரத்து செய்யப்பட மாட்டாது. அனுமதி முற்றிலும் இலவசம்.  மேலும், இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கென வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டம், அரசு வேலைகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேர்க்கை, திறன் பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆலோசனை, அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான ஆலோசனை, மத்திய கூட்டுறவு வங்கியின் கடனுதவி திட்டத்திற்கான ஆலோசனை, மாவட்ட தொழில் மையத்தின் கடனுதவித் திட்டங்களுக்கான ஆலோசனை, மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தொழில்நெறி ஆலோசனைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தம் செய்யும் வேலையளிப்பவர்கள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0424-2275860 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது erodejobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலா கவோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

;